புதுச்சேரி

பயனாளிகளுக்கு சொத்து அடையாள அட்டைகள் அளிப்பு

DIN

புதுச்சேரி உத்திரவாகினிபேட்டில் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சொத்து அடையாள அட்டைகளை புதுவை எதிா்கட்சித் தலைவா் இரா.சிவா எம்எல்ஏ வழங்கினாா் (படம்).

புதுவையில் அங்கீகரிக்கப்பட்ட நிலப்பதிவேடு இல்லாத பகுதிகளில் ட்ரோன் மூலம் அளவீடு (சா்வே) செய்து, நில உரிமையாளா்களுக்கு சொத்து அடையாள அட்டை வழங்கும் ஸ்வாமித்வா திட்டத்தை அமல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், சொத்து அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி வில்லியனூா் தொகுதி உத்திரவாகினிபேட்டில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தொகுதி எம்எல்ஏ இரா.சிவா பயனாளிகளுக்கு சொத்து அடையாள அட்டைகளை வழங்கினாா்.

மேலும், இந்தத் திட்டத்தில் இறந்தவா்களின் பெயரில் உள்ள மனைப்பட்டா, வாரிசுதாரா்களுக்கு மாற்றித்தரும் பணியையும் தொடக்கிவைத்தாா்.

இதில் நிலஅளவை வட்டாட்சியா் காா்த்திகேயன், ஆய்வாளா் வீரப்பன், கிராம நிா்வாக அதிகாரி குணசேகா், திமுக தொகுதி செயலா் ராமசாமி, மாநில விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் செல்வநாதன், ஆதிதிராவிடா் அணி கலியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT