புதுச்சேரி

புதுச்சேரி:  திரும்ப பெறப்பட்டது விற்பனைக்குழு ஊழியர்கள் போராட்டம் 

புதுச்சேரி விற்பனைக்குழு ஊழியர்கள் போராட்டம் திரும்ப பெறப்பட்டது.

DIN

புதுச்சேரி: புதுவை விற்பனைக்குழு ஊழியர்கள் நல சங்கம் சார்பில் ஊதிய நிலுவை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 8 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தப் போராட்டத்தில் உழவர் சந்தையில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் மற்றும் கூனிச்சம்பட்டு, மதகடிப்பட்டு, மடுகரை, கரையாம்புத்தூர், திருக்கனூர், தட்டாஞ்சாவடி ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பணிபுரிந்த 140 தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தினை தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு ஏஐடியூசி பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள், புதுவை முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமுக தீர்வு எட்டப்பட்டது.

தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். நிலுவை சம்பளமும் வழங்கப்படும். ஏழாவது ஊதியக்குழு அமல்படுத்தப்படும். மற்ற மாநிலத்தில் உள்ளதுபோல் கமிட்டி ஊழியர்களை, அரசு ஊழியர்களாக மாற்றி  கருவூலம் மூலம் சம்பளம் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென முதல்வர் உறுதி அளித்தார்.

அதன் அடிப்படையில் வேலை நிறுத்த போராட்டம் முடிவு பெற்று, செவ்வாய்க்கிழமை முதல் வேலைக்கு செல்வதென முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து, ஒழுங்குமுறை விற்பனை கூடம், உழவர் சந்தைகள் முழு செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சி சங்கர மடத்தில் மகா பெரியவர் ஆராதனை மகோற்சவம்!

இந்தியாவில் முதலீடு செய்ய ஜோர்டான் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு!

இரட்டைச் சதம் அடித்த யு-19 இந்திய வீரர்: மலேசியாவுக்கு 409 ரன்கள் இலக்கு!

மோடிக்கு கார் ஓட்டிய ஜோர்டான் இளவரசர்!

பட்டுத்தறி

SCROLL FOR NEXT