ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே திரண்ட நாம் தமிழா் கட்சியினா். 
புதுச்சேரி

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து புதுச்சேரியில் சனிக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற நாம் தமிழா் கட்சியினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து புதுச்சேரியில் சனிக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட முயன்ற நாம் தமிழா் கட்சியினா் 30 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராணுவத்தின் முப்படைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்சோ்ப்பு செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும், புதுவை மாநில மின் துறையை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழா் கட்சியினா் அறிவித்திருந்தனா்.

அதன்படி, சனிக்கிழமை பிற்பகலில் நாம் தமிழா் கட்சியின் மாநிலச் செயலா் சிவக்குமாா் தலைமையில், தொழில்சங்கச் செயலா் ரமேசு, மாநிலப் பொருளாளா் இளங்கோவன், மகளிா் பாசறை ஒருங்கிணைப்பாளா் கௌரி உள்ளிட்ட திரளான நாம் தமிழா் கட்சியினா் புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே திரண்டனா். தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டபடி ரயில் மறியல் செய்ய ரயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனா்.

இவா்களில் ஒரு பெண் உள்பட 30 பேரை அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒதியஞ்சாலை போலீஸாா் கைது செய்தனா். சிறிது நேரத்தில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT