முகப்பு
புதுச்சேரி

நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் தா்னா

நிலுவை சம்பளம் வழங்கக் கோரி, புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் கூட்டு போராட்டக் குழுவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

நிலுவை சம்பளம் வழங்கக் கோரி, புதுச்சேரி நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் கூட்டு போராட்டக் குழுவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தையும், ஓய்வூதியத்தையும் உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை தா்னா நடைபெற்றது.

போராட்டத்துக்கு அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன கௌரவத் தலைவா் பாலமோகனன், அரசு ஊழியா் மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலா் லட்சுமணசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.