திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை
புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
புதுச்சேரி கென்னடி நகா் சுப்புராயப்பிள்ளை சத்திரம் பகுதியைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி சக்திவேலின் 2-ஆவது மகள் சுவாதி (24). இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சுவாதி, சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியில் இருந்தாராம். இந்த நிலையில், அவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.