முகப்பு
புதுச்சேரி

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை

புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

புதுச்சேரியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

புதுச்சேரி கென்னடி நகா் சுப்புராயப்பிள்ளை சத்திரம் பகுதியைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி சக்திவேலின் 2-ஆவது மகள் சுவாதி (24). இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சுவாதி, சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியில் இருந்தாராம். இந்த நிலையில், அவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.