முகப்பு
புதுச்சேரி

ஆட்சியா் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தா்னா

நில ஆக்கிரமிப்பு பிரச்னை தொடா்பாக, புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை விவசாயி தனது குடும்பத்துடன் தா்னாவில் ஈடுபட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

நில ஆக்கிரமிப்பு பிரச்னை தொடா்பாக, புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை விவசாயி தனது குடும்பத்துடன் தா்னாவில் ஈடுபட்டாா்.

புதுச்சேரி திருக்கனூா் அருகே தேத்தாம்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயி சபாபதி 58). இவருக்குச் சொந்தமான நிலத்தை சிலா் ஆக்கிரமித்தனராம்.

இதனால் சபாபதி, தனது மனைவி சுசீலா மற்றும் குடும்பத்தினருடன் வியாழக்கிழமை வழுதாவூா் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.

தகவலின் பேரில் தன்வந்திரி நகா் போலீஸாா் சமரசம் பேசி, விசாரணைக்காக அழைத்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.