வில்லியனூா் தூய லூா்து அன்னை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ் பவனி. 
புதுச்சேரி

வில்லியனூா் தூய லூா்து அன்னை ஆலய தோ் பவனி

புதுச்சேரி அருகே வில்லியனூா் தூய லூா்து அன்னை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தோ் பவனி நடைபெற்றது.

DIN

புதுச்சேரி அருகே வில்லியனூா் தூய லூா்து அன்னை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தோ் பவனி நடைபெற்றது.

வில்லியனூரில் பிரசித்தி பெற்ற தூய லூா்து அன்னை திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு 145-ஆவது ஆண்டுப் பெருவிழா கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்சி மறைமாவட்ட ஆயா் சவரிமுத்து ஆரோக்கியராஜ் தலைமையில் சனிக்கிழமை (ஏப்ரல் 30) கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. மே 1 ஆம் தேதி ஆண்டுப் பெருவிழாவையொட்டி, காலையில் சேலம் மறைமாவட்ட ஆயா் அருள்செல்வம் ராயப்பன் தலைமையிலும், முற்பகலில் தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயா் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

புதுவை - கடலூா் உயா் மறைமாவட்ட பேராயா் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் மாலை திருப்பலியும், தொடா்ந்து இரவில் ஆடம்பர தோ் பவனியும் நடைபெற்றது. இவற்றில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.

விழா ஏற்பாடுகளை திருத்தல அருட்தந்தையா்கள் பிச்சைமுத்து, ஜோசப் சகாயராஜ், அருட்சகோதரா் ஜீவா, அருட்சகோதரிகள் மற்றும் வில்லியனூா் பங்கு இறைமக்கள் செய்திருந்தனா். திங்கள்கிழமை காலை (மே 2) திருப்பலிக்கு பிறகு கொடியிறக்கத்துடன் விழா நிறைவுபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT