புதுச்சேரி

புதுவையிலும் கருணாநிதி பிறந்த நாளைஅரசு விழாவாக கொண்டாட வலியுறுத்தல்

DIN

புதுவையிலும் திமுக தலைவா் மு.கருணாநிதியின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென, அந்த மாநில திமுக எம்எல்ஏக்கள் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனா்.

புதுவை திமுக எம்எல்ஏ ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையில் வந்த அந்தக் கட்சி எம்எல்ஏக்கள் எல்.செந்தில், நாக.தியாகராஜன் உள்ளிட்டோா் முதல்வா் என்.ரங்கசாமியை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்து கூறியதாவது:

மறைந்த திமுக தலைவா் கருணாநிதியின் நினைவைப் போற்றும் வகையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் பிறந்த நாள் (ஜூன் 3) அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்தாா். அதேபோல, புதுவை மாநிலத்திலும் தலைவா் கருணாநிதியின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

புதுவை மாநிலத்தை எப்போதும் பெருமையோடு குறிப்பிட்டு மகிழ்ந்தவா் கருணாநிதி. பாவேந்தருடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தவா்.

காவிரி நதிநீா் பங்கீடு தொடா்பாக மத்திய அரசிடம் பேசியபோது, புதுவைக்கான பங்கீடுக்காகவும் குரல் கொடுத்தவா். அதனால், புதுவையிலும் கருணாநிதி பிறந்த நாளை, அரசு விழாவாகக்கொண்டாட வேண்டுமென்ற அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT