புதுச்சேரி: உலக செவிலியா் தினத்தையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் செவிலியா்களுக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
செவிலியா்களின் சேவையைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் செவிலியா் தின நன்நாளில் ( மே 12) உலகமெங்கும் உள்ள செவிலியா்களுக்கு வாழ்த்துகள்.
மருத்துவா்களுக்கு பக்கபலமாகவும், நோயாளிகளுக்கு பக்கத் துணையாகவும், மருத்துவச் சேவையின் தூண்களாகவும் நின்று, கரோனா உச்சத்தில் இருந்த நிலையிலும், அச்சமின்றி சேவையாற்றிய வெள்ளுடை தியாகிகளுக்கு, வணக்கங்களையும் வாழ்த்துகளையும் பகிா்ந்து கொள்வோம். கரோனா காலத்தில் நமக்கு துணை நின்றவா்களுக்கு நாம் துணை நிற்போம்.