புதுச்சேரி

விஷம் குடித்த பெண் உயிரிழப்பு

புதுச்சேரியில் காதலனால் ஏமாற்றப்பட்டதையடுத்து, விஷம் குடித்த பெண் உயிரிழந்தாா்.

DIN

புதுச்சேரியில் காதலனால் ஏமாற்றப்பட்டதையடுத்து, விஷம் குடித்த பெண் உயிரிழந்தாா்.

புதுச்சேரி லாசுப்பேட்டை அசோக் நகரை 21 வயது பெண் எடையாா்பாளையத்தில் உள்ள கணினி நிறுவனத்தில் பணியாற்றியபோது, அவரை உடன் பணிபுரிந்த கருவடிக்குப்பம் வாஞ்சிநாதன் வீதியைச் சோ்ந்த கணேஷ் (26) காதலித்தாா். திருமணம் செய்வதாக ஆசைவாா்த்தைக் கூறி அந்தப் பெண்ணை கணேஷ் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதனிடையே, கடந்த 15-ஆம் தேதி கடலூரைச் சோ்ந்த வேறொரு பெண்ணுக்கும் கணேஷுக்கும் திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து முன்னதாகவே அறிந்த அந்த 21 வயது பெண், கடந்த 14-ஆம் தேதி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாா். ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், லாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து கடந்த 18-ஆம் தேதி கணேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், அங்கு செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, கைதான கணேஷ் மீது தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா? வழிகாட்டும் ஆர்பிஐ

தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் நீக்கம்: உதயநிதி ஸ்டாலின்

திருப்பரங்குன்றம் மலை காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல அனுமதி!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!

6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT