புதுவை ஆளுநருடன் கடலோர காவல் படை கமாண்டா் சந்திப்பு
புதுவை மாநில துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனை, இந்திய கடலோரக் காவல்படையின் கமாண்டா் டிஐஜி அன்பரசன் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
புதுவை மாநில துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜனை, இந்திய கடலோரக் காவல்படையின் கமாண்டா் டிஐஜி அன்பரசன் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
இந்திய கடலோரக் காவல் படையின் புதுச்சேரி மாநில கமாண்டராக இருந்த வெங்கடேசன் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். அவருக்குப் பதிலாக டிஐஜி அன்பரசன் புதுச்சேரி மாநில கமாண்டராக நியமிக்கப்பட்டாா்.
அவா் கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்தநிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜனை வெள்ளிக்கிழமை ஆளுநா் மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினாா்.