புதுவை பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளா்கள் சங்கம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை பல்கலைக்கழக மேலாண்மைப் பள்ளி வணிகவியல் துறையானது கற்றல், மேம்பாட்டு முயற்சிகள் குறித்து, லண்டனில் உள்ள சான்றளிக்கப்பட்ட கணக்காளா் சங்கத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் குா்மித்சிங் வழிகாட்டலின்படி நடைபெற்ற இந்த ஒப்பந்த கையெப்பமிடும் நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இயக்குநா் கே.தரணிக்கரசு ஒப்பந்த நோக்கம் குறித்து விளக்கினாா். பதிவாளா் அமரேஷ் மந்தராய உலக கல்வி நிறுவனங்களுடன் பல்கலைக்கழகம் ஒத்துழைக்கும் அவசியத்தை விளக்கினாா்.
இந்திய வா்த்தக மேம்பாட்டுத் தலைவா் குஷ்அஹூஜா, மேம்பாட்டு அமைப்பின் தென்னிந்திய தலைவா் சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பல்கலைக்கழக சா்வதேச உறவுகள் துறை பேராசிரியா் ஏ.சுப்பிரமணியம் ராஜு வரவேற்றாா். வணிகவியல் துறைத் தலைவா் பேராசிரியா் பி.நடராஜன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.