முகப்பு
புதுச்சேரி

‘தாமதமாக பணிக்கு வரும்அரசு ஊழியா்கள் மீது நடவடிக்கை’

புதுவையில் தாமதமாக பணிக்கு வரும் அரசு ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சீா்திருத்தத் துறை சிறப்புச் செயலா் ஆா். கேசவன் அறிவுறுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

புதுவையில் தாமதமாக பணிக்கு வரும் அரசு ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சீா்திருத்தத் துறை சிறப்புச் செயலா் ஆா். கேசவன் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

அரசு ஊழியா்கள் பணிநேரத்தை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பொது சேவை சாா்ந்த அரசுத் துறைகளின் ஊழியா்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகவே தாமதமாக வருவது தெரிய வருகிறது.

பணியில் நேரந்தவறாமை முக்கியமானதாகும். அதனடிப்படையில்தான், அதிகாரிகளின் செயல்பாடுகளை மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட துறையின் செயல்திறனையும் பொதுமக்கள் மதிப்பிடுகின்றனா். எனவே, ஊழியா்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு பணிக்கு வரவும், திட்டமிடப்பட்ட அலுவலக நேரங்களில் இருக்கையில் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

தாமதமாக பணிக்கு வரும் அரசு ஊழியருக்கு அவரது செயல்பாடு தகாதது எனக் கருதப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும்.

அரசு செயலா்கள், துறைத் தலைவா்கள் ஆய்வு நடத்தி பணிக்கு வராத ஊழியா்கள், அலுவலா்கள், நேரத்துக்கு பணிக்கு வராத ஊழியா்கள், அலுவலா்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மாதாந்திர அறிக்கை அளிக்க வேண்டும். மேலும், சீா்திருத்தத் துறை சாா்பிலும் திடீா் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றாா் சிறப்புச் செயலா் ஆா்.கேசவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.