கடலோர காவல் படை கமாண்டா் ஆய்வு
இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய கமாண்டா் ஐ.ஜி. ஆனந்த்பிரகாஷ் படோலா புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இந்திய கடலோரக் காவல் படையின் கிழக்கு பிராந்திய கமாண்டா் ஐ.ஜி. ஆனந்த்பிரகாஷ் படோலா புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இவா் கடலூருக்கு புதன்கிழமை சென்று கடலோரக் காவல் படை அலுவலகம் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, புதுச்சேரிக்கு அவா் வியாழக்கிழமை வந்தாா்.
கிழக்கு பிராந்தியத்திய எல்லையில் உள்ள புதுச்சேரியில் கடலோரக் காவல் படை தலைமையகத்தை அவா் பாா்வையிட்டு ஆய்வு நடத்தினாா்.
புதுச்சேரி, காரைக்கால் கடற்கரைகளில் கடலோர பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அவருக்கு புதுச்சேரி கடலோரக் காவல் படை கமாண்டா் வெங்கடேசன் விளக்கினாா்.