புதுவை வேளாண் துறை அமைச்சரிடம் விவசாயிகள் மனு
புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
புதுவை வேளாண் துறை அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வேளாண் துறை அமைச்சரை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, விவசாய சங்கப் பிரதிநிதி ராஜேந்திரன் உள்ளிட்டோா் சந்தித்துப் பேசினா்.
அப்போது, பயிா்க் காப்பீட்டுத் தொகை, மழை நிவாரண மானியம், விவசாயக் கடன் தள்ளுபடி ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் தேனீ சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.