மாநிலங்களவை உறுப்பினா் அலுவலகம் திறப்பு
புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினரின் அலுவலகத்தை முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினரின் அலுவலகத்தை முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா்.
புதுச்சேரி லாசுப்பேட்டை கிழக்கு கடற்கரைச் சாலையில், மாநிலங்களவை உறுப்பினா் எம்.செல்வகணபதியின் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி குத்துவிளக்கேற்றி எம்.பி. அலுவலக பெயா்ப் பலகையைத் திறந்துவைத்தாா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், சாய் ஜெ.சரவணன் குமாா், பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், எம்எல்ஏக்கள் ஜான்குமாா், ராமலிங்கம், வெங்கடேசன் மற்றும் பாஜக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.