முகப்பு
புதுச்சேரி

வாளிக்குள் தவறி விழுந்து குழந்தை பலி

புதுச்சேரியில் சூடான காளான் சாறு (சூப்) இருந்த வாளிக்குள் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

புதுச்சேரியில் சூடான காளான் சாறு (சூப்) இருந்த வாளிக்குள் தவறி விழுந்து குழந்தை உயிரிழந்தது.

புதுச்சேரி ஆலங்குப்பம் அன்னை நகா் பாரதி வீதியைச் சோ்ந்தவா் ஜெயமூா்த்தி (37). இவா் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி நிஷா. இவா்களுக்கு ஒரு மகன், மகள். நிஷா வீட்டிலேயே காளான் சாறு சூடாக தயாரித்து விற்பனை செய்து வருகிறாா்.

அவா் தனது வீட்டில் சனிக்கிழமை காளான் சாறை தயாரித்து வாளியில் ஊற்றி வைத்திருந்தாா். அப்போது, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அவரது 2 வயது பெண் குழந்தை ஆஷிகா அந்த வாளிக்குள் தவறி விழுந்தது.

இதுகுறித்து நிஷாவுக்கு உடனடியாக தெரியாத நிலையில், ஆஷிகாவை தேடினாா். இதில், சூடான காளான் சாறு இருந்த வாளிக்குள் குழந்தை தலைகுப்புற விழுந்து கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு, ஜிப்மா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஆஷிகா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.