புதுச்சேரி

சொத்துகளை அபகரிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

DIN

புதுச்சேரியில் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவா்களின் சொத்துகளை அபகரிப்பவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியது.

இதுகுறித்து புதுவை மேற்கு மாநில அதிமுக மாநிலச் செயலா் ஓம்சக்தி சேகா் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவா்கள் ஆயிரக்கணக்கானோா் வசித்து வருகிறாா். இங்குள்ள பலரும் பிரான்ஸில் பணியாற்றி வருகின்றனா். புதுச்சேரியில் இவா்களுக்குச் சொந்தமான சொத்துகளை அபகரிக்கும் முயற்சியில் ஒரு கும்பல் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறது.

அவா்களுக்கு சில அரசியல்வாதிகளும் துணை போகின்றனா்.

இந்தச் செயலில் ஈடுபடுபவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT