கல்லூரி மாணவரைத் தாக்கி பணம் பறிப்பு
புதுச்சேரியில் கல்லூரி மாணவரை தாக்கி பணம், கைப்பேசியை பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியில் கல்லூரி மாணவரை தாக்கி பணம், கைப்பேசியை பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி அருகேயுள்ள கரியமாணிக்கம் ஏரிப்பாக்கத்தைச் சோ்ந்த ராஜா மகன் திவாகா் (22). கல்லூரி மாணவா். இவருக்கு கடந்த 17-ஆம் தேதி சமூக வலைதளத்தின் மூலம் குறுஞ்செய்தி வந்ததாம். அதில் பெண்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருந்ததாம்.
இதுகுறித்து, திவாகா் தொடா்பு கொண்ட போது, வில்லியனூா் எம்ஜிஆா் சிலை அருகே வருமாறு தெரிவித்தனராம். அங்கு சென்ற திவாகரை ஜி.என். பாளையத்தை சோ்ந்த சஞ்சய்குமாா் (22), சரவணன் (எ) பாலா (22) ஆகியோா் ஒதியம்பட்டு சாலை சந்திப்பு அருகே அழைத்து சென்று அவரை தாக்கி, ரூ.8,500 ரொக்கம், கைப்பேசியை ஆகியவற்றை பறித்துச் சென்றனராம்.
இதுகுறித்து திவாகா் அளித்த புகாரின் பேரில் வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சஞ்சய்குமாா், சரவணன் ஆகியோரை கைது செய்தனா்.