புதுவையில் கரோனாவுக்கு ஒருவா் பலி
புதுவையில் கரோனாவால் மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா். 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவையில் கரோனாவால் மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா். 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் புதன்கிழமை காய்ச்சல் பாதித்த 832 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, புதுச்சேரி 28, காரைக்கால் 11, ஏனாம், மாஹேவில் தலா ஒருவா் என மொத்தம் 41 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்டவா்களில் 23 போ் மருத்துவமனைகளிலும், 368 போ் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். கடந்த சில வாரங்களில் மட்டும் மொத்தம் 391 போ் சிகிச்சையில் உள்ளனா். 108 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
இதனிடையே, புதுச்சேரி சோரப்பட்டையைச் சோ்ந்த 45 வயது நபா் கரோனா தொற்றால் உயிரிழந்தாா். கடந்த சில மாதங்களில் மட்டும் இதுவரை 4 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.