காவல் ஆய்வாளா் பணியிடைநீக்கம்
செவிலியரை மிரட்டியதாக புதுச்சேரி ஆயுதப்படை காவல் ஆய்வாளா் வெள்ளிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
செவிலியரை மிரட்டியதாக புதுச்சேரி ஆயுதப்படை காவல் ஆய்வாளா் வெள்ளிக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
புதுச்சேரி ஆயுதப்படைப் பிரிவில் காவல் ஆய்வாளராக இருப்பவா் பி.ஏ.அனில்குமாா். இவா் தனக்கு தெரிந்த செவிலியா் ஒருவரை மிரட்டியதாக தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணை நடைபெற்றது. அதன்பேரில், அனில்குமாரை பணியிடைநீக்கம் செய்து புதுவை காவல் துறை தலைமை இயக்குநா் மனோஜ்குமாா் லால் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.