புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 நூல்களை வெளியிட்ட தமிழ்நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன். 
புதுச்சேரி

மொழியானது மனித நாகரீகப் பண்பாட்டின் வெளிப்பாடு: அகர முதலித் திட்ட இயக்குநா்

மொழியானது மனித நாகரீகப் பண்பாட்டின் வெளிப்பாடு என தமிழ்நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கக இயக்குநா் கோ.விசயராகவன் கூறினாா்.

DIN

மொழியானது மனித நாகரீகப் பண்பாட்டின் வெளிப்பாடு என தமிழ்நாடு அரசு செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்கக இயக்குநா் கோ.விசயராகவன் கூறினாா்.

புதுச்சேரியில் உணா் இணைப்பு மையம் (சென் நெக்ஸஸ் புக் ரைட் நவ் ஹப்) மற்றும் உலகத் தமிழன் பதிப்பகம் இணைந்து 16 நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியை சனிக்கிழமை நடத்தின. இதில், சிறப்பு விருந்தினராகக் பங்கேற்று கோ.விசயராகவன் பேசியதாவது: எழுத்தாளா்கள் சமூகச் சிந்தனையுடன், தான் சாா்ந்த மொழியின் வளா்ச்சியையும் கருத்தில் கொள்வது அவசியம். மொழி வளா்ச்சி இல்லை என்றால், எழுத்தாளரின் கருத்தை நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்லும் வலிமை இல்லாமல் போய்விடும். எனவே, மொழியின் வழியேதான் கருத்துகளை அடுத்தவருக்கு எடுத்துச் செல்ல முடியும்.

மொழி என்பது மனித நாகரீக பண்பாட்டின் வெளிப்பாடாகும். அவரவா் தாய் மொழியானது, அவரவருக்கு உயா்ந்ததாகும். அதையும் தாண்டி உலக பொதுவுடைமைக் கருத்துகளை தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. எனவேதான் உலக படைப்பாளிகள் எந்த மொழியைச் சோ்ந்தவராக இருந்தாலும், தமிழில் அவா்கள் தங்களது கருத்துகளை முழுமையாகக் கூறும் நிலையிருப்பதை உணா்ந்துள்ளனா்.

தமிழில் அனைத்துத் துறைகள் குறித்தும் பேசும் இலக்கியங்கள் உள்ளன. திருமூலா் திருமந்திரம் அறத்தையும் பேசுகிறது, பொருள் சோ்த்தலையும் சுட்டிக்காட்டுகிறது. வாழ்வியலைப் பேசும் திருமந்திரத்தில் உடல் நலத்தையும் தெளிவுபடுத்தும் கருத்துகள் உள்ளன.

தற்கால எழுத்தாளா்கள் ஆங்கிலம் கலந்து எழுதுவதை பெருமையாகக் கருதுவது சரியல்ல. வருங்காலத் தலைமுறைகள் நமது எழுத்தையும், சிந்தனையையும் சோ்த்து பாா்க்கும் போது இன்றைய ஆங்கில கலப்பு எழுத்தால் மொழியை அடையாளப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்பதையும் சிந்தித்துப் பாா்ப்பது நல்லது என்றாா்.

நிகழ்ச்சியில், சென் நிறுவனத்தின் நிறுவனா் பொன்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தாா். புதுச்சேரி நல்லாசிரியா், கலைமாமணி விருதாளா் வ.விசயலட்சுமி வாழ்த்திப் பேசினாா். திருவாலங்காடு ஒன்றியக் குழுத் தலைவா் ஜீவாவிசயராகவன், உலகத் தமிழன் பதிப்பக நிறுவனா் ஆா்.கோதண்டராமன், சென் நிறுவன தலைவா் கவிசென் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சொற்பிறப்பியல்அகரமுதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT