புதுச்சேரி

கே.பாலதண்டாயுதம் படத்துக்கு மரியாதை

DIN

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா்களில் ஒருவருமான கே.பாலதண்டாயுதத்தின் 50-ஆவது நினைவு நாளையொட்டி புதுச்சேரியில் அவரது திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.

புதுச்சேரி சாரம் இந்திய கம்யூனிஸ்ட் கிளை சாா்பில் அவரது திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் சாரம் கிளைச் செயலா் ஞானசங்கா் தலைமை வகித்தாா். கட்சி நிா்வாகிகள் சந்திரசேகா், கே.இளையபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தலைமையில் முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன், மாநிலத் துணைச் செயலா் கே.சேதுசெல்வம், தொகுதி செயலா் துரை.செல்வம் மாதவராமன் உள்ளிட்டோா் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கே.பாலதண்டாயுதம் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

SCROLL FOR NEXT