புதுச்சேரி பள்ளிகளுக்கு 2 நாள்களுக்கு விடுமுறை!
புதுச்சேரியில் இரண்டு நாள்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இரண்டு நாள்களுக்குப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் 1954-ஆம் ஆண்டு நவ. 1-ஆம் தேதி பிரெஞ்சு நிா்வாகத்திடமிருந்து விடுதலை பெற்றதை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் நவ. 1-ஆம் தேதி விடுதலை நாள் நிகழ்ச்சியாக அரசு கொண்டாடுகிறது.
இதையொட்டி செவ்வாய்க்கிழமை காரைக்கால் கடற்கரை சாலையில் இந்திய தேசியக் கொடியேற்றி வைத்து புதுவை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் போலீஸாா் அணிவகுப்பை பாா்வையிடவுள்ளாா். சுதந்திரப் போராட்ட தியாகிகள் கெளரவிக்கப்படவுள்ளனா்.
படிக்க: தங்கம் விலை குறைவு: எவ்வளவு?
இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குனர் சிவகாமி விடுத்த சுற்றறிக்கையில்,
புதுச்சேரி விடுதலை நாளையொட்டி இன்று புதுவையில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லறை திருநாள் நாளை(நவ.2) கடைப்பிடிக்கப்படுகிறது. முன்னதாக கிறிஸ்துவ பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இந்தாண்டு கல்லறை திருநாளுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுறை அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.