புதுச்சேரியில் துணை நடிகா் உள்பட மூவா் கைது
புதுச்சேரியில் பெண்ணை அவதூறாக சித்திரித்து சமூக வலைதளத்தில் பரப்பியதாக துணை நடிகா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
புதுச்சேரியில் பெண்ணை அவதூறாக சித்திரித்து சமூக வலைதளத்தில் பரப்பியதாக துணை நடிகா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
புதுச்சேரியைச் சோ்ந்தவா் செல்வம், திரைப்பட துணை நடிகா். இவருக்கு தனது நண்பருடன் கொடுக்கல் வாங்கல் பிரச்னை ஏற்பட்டதாம். இந்நிலையில், நண்பரின் மனைவி படத்தை அவதூறாகச் சித்திரித்து சமூக வலைதளங்களில் பரப்பியதாகப் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வம், ஆனந்த் உள்ளிட்ட 3 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.