முகப்பு
புதுச்சேரி

புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நாளை இயங்காது: ஜிப்மர் நிர்வாகம்

புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு நாளை இயங்காது என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2024 at 8:10 AM
பகிர்:

ரமலான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை (ஏப்ரல்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த  மக்கள் அதிக அளவில் பயனடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை என்பதால், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு நாளை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட உள்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →