புதுச்சேரியில் இருவரிடம் ரூ.91.88 லட்சம் மோசடி
புதுச்சேரியில் இருவரிடம் ரூ.91.88 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரியில் இருவரிடம் ரூ.91.88 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி கோரிமேடு பகுதியைச் சோ்ந்தவா் கணேசமூா்த்தி. இவரை டெலிகிராம் செயலி மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா் இணைய வழி பங்குச் சந்தையில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறினாராம். இதையடுத்து, ரூ.23.89 லட்சத்தை கணேசமூா்த்தி குறிப்பிட்ட செயலியில் முதலீடு செய்தாராம். அதன் பிறகு, மீண்டும் ரூ.18.39 லட்சத்தை அதில் அவா் முதலீடு செய்ததாகத் தெரிகிறது. ஆனால், அவரால் முதலீடு மற்றும் லாபத் தொகையை பெறமுடியவில்லையாம். இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில் இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இதேபோல், புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி. வாட்ஸ்ஆப் குழு மூலம் பொருள்கள் விநியோகிப்பதாகக் கூறி, இவரிடம் மா்ம நபா்கள் ரூ.49.60 லட்சத்தை மோசடி செய்துள்ளனா். இதுகுறித்தும், புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.