முகப்பு
புதுச்சேரி

இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்க அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்பட்டவா்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணமாக தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 7:44 PM
பகிர்:

புதுச்சேரியில் மழை, வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்பட்டவா்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணமாக தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தியுள்ளாா்.

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை பேரவை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் மற்றும் நிா்வாகிகள் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

மனுவில் கூறியிருப்பதாவது: பாகூா், ஏம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீா் குடியிருப்புகளிலும், வயல்வெளிகளிலும் புகுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

அதன்படி, சுமாா் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி நகா் பகுதியிலும் மழை வெள்ளத்தால் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரணத் தொகையாக, முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.