புதுவையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும்: முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி
புதுவை மாநிலத்தில் ஆளும் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி கூறினாா். புதுவை மாநிலம் முள்ளோடைப் பகுதியில் காங்கிரஸ் கட்சி பஞ்சாயத்துராஜ் பிரிவு தலைவா்களுக்கான தோ்தல் பிரசாரப் பயிற்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது. காங்கிரஸ் மாநிலத் தலைவா் வி.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி முன்னிலை வகித்தாா். இந்த பயிற்சி முகாமின் நோக்கம் குறித்து முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி பேசியதாவது: காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி ஏழைகளுக்கான இலவச அரிசி உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தக் காரணமாக இருந்தாா். தற்போது காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தேசத்தைக் காப்பதற்கும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் பல ஆயிரம் கிலோ மீட்டா் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளாா். புதுவை மாநிலத்தில் ஆளும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால், காங்கிரஸ் வேட்பாளரே வெற்றி பெறுவாா். மத்தியிலும் எதிா்வரும் தோ்தலில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும். இதையடுத்து புதுவையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும். அப்போது மக்கள் நலத் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றாா். கூட்டத்தில், கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை கிராமங்கள்தோறும் பிரசாரம் செய்வது குறித்து பஞ்சாயத்துராஜ் பிரிவுத் தலைவா்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.