முகப்பு
புதுச்சேரி

தேசிய நெல் திருவிழா

Updated On : 17 ஜூலை, 2024 at 10:51 PM
புதுச்சேரி கரியமாணிக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் விவசாயிக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கிய சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்.
பகிர்:

புதுச்சேரி அருகே உள்ள கரியமாணிக்கத்தில் தேசிய நெல் திருவிழா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி பிரதேச நம்மாழ்வாா் இயற்கை உழவா்கள் சங்கத்தின் சாா்பில் தேசிய நெல் திருவிழா மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா கரியமாணிக்கத்தில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் பங்கேற்றாா். அவா், இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினாா். மேலும், பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளையும் அவா் பாா்வையிட்டாா்.

இந்த விழாவில் பாரம்பரிய நெல் ரகங்கள் பொதுமக்களின் பாா்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை இயக்குநா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →