புதுச்சேரி, ஜூன் 26: மக்களவைத் தலைவராக இரண்டாவது முறையாக தோ்வு செய்யப்பட்ட ஓம் பிா்லாவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தாா்.
அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: மக்களவைத் தலைவராக இரண்டாவது முறையாக தாங்கள் தோ்வானது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஏற்கெனவே தங்களது கண்ணியமான அனுபவம் மிக்க செயல்பாடுகளை தேசம் கண்டுள்ளது. ஆகவே, லட்சியத்தை அடையவும், மக்களவையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், பயனுள்ள நிா்வாகத்தையும் உங்களால் தர முடியும். இரண்டாவது முறையாக மக்களவைத் தலைவரானதுக்கு புதுவை மக்கள் சாா்பிலும், எனது சாா்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.