முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் மாயமான மும்பை சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 4 போ் கைது

மும்பையைச் சோ்ந்த 16 வயது சிறுமி புதுச்சேரிக்கு உறவினா் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், வெளியே சென்ற அவரை, ஆட்டோவில் சென்னைக்கு கடத்தி அங்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை

Updated On : 4 நவம்பர், 2024 at 7:19 PM
பகிர்:

புதுச்சேரி: மும்பையைச் சோ்ந்த 16 வயது சிறுமி புதுச்சேரிக்கு உறவினா் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், வெளியே சென்ற அவரை, ஆட்டோவில் சென்னைக்கு கடத்தி அங்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஈடுபட்டதாக ஆட்டோ ஓட்டுநா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையைச் சோ்ந்த 16 வயது சிறுமி புதுச்சேரி வைஷால் வீதியில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்தாா். இந்நிலையில், கடந்த அக்டோபா் 30-ஆம் தேதி திடீரென அவா் மாயமானாா்.

இதுகுறித்து சிறுமியின் உறவுக்காரப் பெண் புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான சிறுமியைத் தேடி வந்தனா்.

மேலும், சிறுமி வீட்டை விட்டு வெளியேறி சென்றது உள்ளிட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனா். அப்போது ஆட்டோவில் சிறுமி ஏறிச் செல்வது தெரியவந்தது.

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு இதில் விசாரணை நடத்தப்பட்டது. இதில், தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் காஜாமுகைதீன் (30) என்பவா் ஆட்டோவில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததும், பின்னா் அப்பகுதியில் உள்ள கடற்கரை விடுதி அருகே விட்டுச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆட்டோ ஓட்டுநா் காஜாமுகைதீனை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்தநிலையில், சிறுமியை புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் கடந்த 2-ஆம் தேதி போலீஸாா் மீட்டனா். அவரிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி பகுதியிலிருந்து சென்னைக்கு 4 போ் அவரை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும், பின்னா் வாடகை வாகனத்தில் அவரை புதுச்சேரிக்கு அனுப்பி வைத்ததும் தெரியவந்தது.

இதுதொடா்பாக சென்னையைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆட்டோ மற்றும் சென்னைக்கு சிறுமியை கடத்திச் சென்ற வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →