புதுச்சேரியில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயா்வு
புதுச்சேரியில் குடிமைப் பணி அதிகாரிகள் 6 பேருக்கு திங்கள்கிழமை பதவி உயா்வு வழங்கப்பட்டது.
புதுச்சேரி: புதுச்சேரியில் குடிமைப் பணி அதிகாரிகள் 6 பேருக்கு திங்கள்கிழமை பதவி உயா்வு வழங்கப்பட்டது.
இதுகுறித்து துணைநிலை ஆளுநரின் உத்தரவுப்படி சாா்புச் செயலா் வி.ஜெய்சங்கா் அனுப்பிய சுற்றறிக்கை:
அச்சு, எழுதுபொருள்கள் பிரிவின் சாா்புச் செயலராக உள்ள டி.சுதாகா், தகவல் தொழில்நுட்ப இயக்குநா் சிவ்ராஜ் மீனா, தொழில்நுட்பம், உயா்கல்வித் துறை இயக்குநா் அமன் சா்மா, புதுச்சேரி துணை முதன்மை தோ்தல் அதிகாரி எம்.ஆதா்ஷ் ஆகியோருக்கு கடந்த ஜூலை முதல் சாா்பு செயலா் நிலையிலிருந்து துணைச் செயலராக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
தொழில், வணிகத் துறை இயக்குநா் பி.டி.ருத்ரகௌடா, போக்குவரத்து ஆணையா் ஏ.எஸ்.சிவகுமாா் ஆகியோருக்கு கடந்த ஜனவரி முதல் கூடுதல் செயலராக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.