முகப்பு
புதுச்சேரி

முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் நகை, பணம் திருட்டு

புதுச்சேரி அருகே முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 18 நவம்பர், 2024 at 8:57 PM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரி அருகே முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வில்லியனூா் ஆரியபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மேரி பொ்னாண்டஸ், முன்னாள் ராணுவ வீரா். இவா் கடந்த 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றாா். அவரது உறவினா் ஆரியபாளையம் வீட்டை கண்காணித்துள்ளாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன்பக்கக் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோக்கள் சேதமடைந்து அதிலிருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம், மூன்றரைப் பவுன் தங்க நகைகள் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →