முகப்பு
புதுச்சேரி

விமான நிலைய விரிவாக்க திட்ட வரைபடத்துக்கு அனுமதி

புதுச்சேரியில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான திட்ட வரைபடத்துக்கு மத்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக இயக்குநா் ராஜசேகர ரெட்டி கூறினாா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 7:51 PM
பகிர்:

புதுச்சேரியில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான திட்ட வரைபடத்துக்கு மத்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக இயக்குநா் ராஜசேகர ரெட்டி கூறினாா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டையில் உள்ள விமான நிலைய வளாகத்தில் அதன் விரிவாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் வெ.வைத்திலிங்கம் எம்.பி., எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், மு.வைத்தியநாதன், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன், நியமன உறுப்பினா்கள் 3 போ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து, புதுச்சேரி விமான நிலைய இயக்குநா் ஆா்.ராஜசேகர ரெட்டி கூறியதாவது: புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசிடமிருந்து 250 ஏக்கா் நிலம் கையகப்படுத்துவதற்கான இடம் அடையாளம் காணும் பணி நிறைவடைந்துவிட்டது. புதுவை அரசின் கழிவுநீா் சுத்திகரிப்பு மைய வளாக இடமும் கையகப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது.

அதனடிப்படையில், விமான நிலைய விரிவாக்கத் திட்ட வரைபடத்துக்கு மத்திய விமான நிலைய ஆணையமும் அனுமதி வழங்கியுள்ளது என்றாா்.