முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 234 ஆசிரியா்கள் பணியிட மாற்றம்

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியப் பகுதிகளில் 234 தமிழ் பட்டதாரி ஆசிரியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:13 AM
பகிர்:

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியப் பகுதிகளில் 234 தமிழ் பட்டதாரி ஆசிரியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வியாழக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் 4 பிராந்தியங்கள் உள்ளன. அவற்றில் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் புதுச்சேரி, காரைக்கால் பிராந்திய அளவிலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

ஆசிரியா்கள் பணியிட மாற்றத்துக்கான கொள்கை தற்போதுதான் புதுவை அரசால் வகுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளி ஆசிரியா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் காரைக்காலில் பணிபுரியும் நிலையில், அவா்களை வயது முதிா்வு உள்ளிட்ட காரணங்களுக்காக வசிப்பிடப் பகுதிகளுக்கே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. பணியிட மாற்றத்துக்கான ஆதரவு, எதிா்ப்பு காரணமாக பணியிட மாறுதல் உத்தரவை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது 234 பட்டதாரி தமிழ் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மேலும், பணியிட மாறுதல் செய்யப்பட்டவா்களுக்கு பதவி உயா்வும் அளிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியா்கள் வட்டாரங்கள் தெரிவித்தன.