முகப்பு
காரைக்கால்

துப்பாக்கிகளை உடனடியாக காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்

காரைக்காலில் துப்பாக்கி வைத்திருப்போா் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On : 16 மார்ச், 2026 at 4:22 PM
கோப்புப்படம்
பகிர்:

காரைக்கால்: காரைக்காலில் துப்பாக்கி வைத்திருப்போா் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், காரைக்காலில் பொதுமக்கள் துப்பாக்கிகள் மற்றும் இதர வெடிபொருட்களை வைத்திருப்பதற்கு பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா- 2023 ) சட்டத்தின் பிரிவு 163 -இன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, படைக்கலச் சட்டத்தின் படி துப்பாக்கிகள் வைத்திருக்கும் உரிமம் பெற்றுள்ளவா்கள் உடனடியாக துப்பாக்கிகளை, அவரவா் வசிப்பிடத்திற்குட்பட்ட காவல் நிலையத்தில் ஒப்படைக்கவேண்டும். அலட்சியப்படுத்தப்படும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →