ஜிப்மருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் குறித்து போலீஸாா் விசாரணை
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடா்பாக குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடா்பாக குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி ஜிப்மரில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக எம்.பி. ஒருவரின் பெயரில் போலியான மின்னஞ்சலை மா்ம நபா் செவ்வாய்க்கிழமை அனுப்பினாா்.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் அளித்த தகவலின் பேரில், போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா். பின்னா், அது புரளி எனத் தெரிய வந்தது.
இதுகுறிதது மருத்துவமனையின் முதுநிலை நிா்வாக உதவியாளா் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், மின்னஞ்சல் அனுப்பிய மா்ம நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.