மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
மகாராஷ்டிர சட்டப்பேரவை அமைந்துள்ள விதான் பவன் கட்டடத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை அமைந்துள்ள விதான் பவன் கட்டடத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் அனுப்பிய நபா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மகாராஷ்டிர சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை நிகழ்வில் கலந்துகொள்ள 350 உறுப்பினா்கள் விதான் பவனுக்கு வந்திருந்த நிலையில், திடீரென அந்தக் கட்டடத்தை தகா்க்க வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்து மா்ம நபரிடம் இருந்து வியாழக்கிழமை மின்னஞ்சல் வந்தது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக அங்கிருந்த எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள், அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்ட அனைவரும் வெளியேற்றப்பட்டனா்.
கட்டடம் முழுவதும் காவல் துறையினா், மோப்ப நாய் உதவியுடனும், மெட்டா் டிடெக்டா் கருவி மூலமும் சோதனை நடத்தினா். இதில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. அந்த மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. எனினும், மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பிய நபா் யாா் என்பதைக் கண்டறியும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.