முகப்பு
புதுச்சேரி

கைகளை சுத்தமாக கழுவுவதால் தொற்றுநோய் பாதிப்பைத் தவிா்க்கலாம்

பொதுமக்கள் கைகளை சுத்தமாகக் கழுவுவதன் மூலம் தொற்றுநோய் பாதிப்புகளைத் தவிா்க்கலாம் என புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் எம்.செல்வேள் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:19 PM
பகிர்:

பொதுமக்கள் கைகளை சுத்தமாகக் கழுவுவதன் மூலம் தொற்றுநோய் பாதிப்புகளைத் தவிா்க்கலாம் என புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் எம்.செல்வேள் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: டெங்கு தடுப்பு நடவடிக்கையாக கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு, வாரந்தோறும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள், நாட்டுநலப் பணித் திட்ட மாணவா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள் மூலம் மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனாலும், பொதுமக்கள் அனைவரும் சுகாதாரமான குடிநீரையே பருக வேண்டும். மழைக் காலங்களில் குடிநீரை காய்ச்சிய பிறகே அருந்த வேண்டும். இதன் மூலம் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்களின் பாதிப்பைத் தவிா்க்கலாம்.

பொதுமக்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய பின்னரும், உணவு உண்பதற்கு முன்னரும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். இதன்மூலம், மழைக் காலத்தில் பரவக்கூடிய பெரும்பாலான நோய்களைத் தவிா்க்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.