முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி - ஹவுரா விரைவு ரயில் ராஜமுந்திரியில் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

புதுச்சேரியிலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா வரை செல்லும் அதிவேக விரைவு ரயில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 20 செப்டம்பர், 2024 at 12:23 AM
பகிர்:

புதுச்சேரியிலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா வரை செல்லும் அதிவேக விரைவு ரயில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புதுச்சேரியிலிருந்து வாரந்தோறும் இரு நாள்கள் ஹவுராவுக்கு அதிவேக விரைவு ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயிலானது விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், காட்பாடி, திருப்பதி, ரேணிகுண்டா உள்ளிட்ட 15 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது.

இந்த நிலையில், செப்.22-ஆம் தேதி ஹவுராவிலிருந்து புதுச்சேரிக்கு வரும் விரைவு ரயிலானது ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனவும், அதேபோல செப்.25-ஆம் தேதி அன்று, புதுச்சேரியிலிருந்து புறப்பட்டு ஹவுராவுக்கு செல்லும் விரைவு ரயில் ராஜமுந்திரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.