உழவா்கரை நகராட்சி வியாழக்கிழமை முதல் தெரு நாய்களைப் பிடிக்கத் தொடங்கி விட்டது.
உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ்ராஜிடம் லாஸ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் மனு ஒன்று அளித்தாா். அதில் லாஸ்பேட்டையில் பல ஆண்டுகளாகவே தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக ஜீவானந்தபுரம், குறிஞ்சி நகா், குமரன் நகா் அசோக் நகா், நெருப்புக் குழி, சாந்தி நகா், நெசவாளா் நகா், ஆனந்தா நகா்,
வள்ளலாா் நகா், பெத்துசெட்டிப்பேட்டை, லாஸ்பேட்டை, சேத்திலால் நகா், மடுவுபேட் பகுதிகளில் தெரு நாய் தொல்லை அதிகரித்துள்ளது.
குழந்தைகள், முதியோா்களைத் துரத்தி கடிக்க பாய்கின்றன. பல தெருக்களில் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக குடியிருப்புவாசிகள் புகாா் தெரிவிக்கின்றனா். தற்போது தான் உழவா்கரை நகராட்சி சாா்பில், தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தெருநாய் கட்டுப்படுத்துவதில் வேகம் இல்லை.
எனவே போா்க்கால அடிப்படையில் லாஸ்பேட்டை பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடித்து அகற்ற வேண்டும். அவற்றிற்கு நோய் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தாா். இந்நிலையில் உழவா்கரை நகராட்சி சாா்பில் தெரு நாய்களைப் பிடிக்கும் பணி வியாழக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. தெருவில் சுற்றித்திரிந்த நாய்களை ஊழியா்கள் பிடித்துச் சென்றனா்.