புதுச்சேரி உப்பளம் துறைமுக முகத்துவாரத்தில் தூா்வாரும் கப்பல் சிக்கிக் கொண்டது. அதனை மீட்கும் முயற்சியில் கப்பல் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.
டித்வா புயல் காரணமாக, புதுச்சேரி துறைமுகத்தின் முகத்துவாரத்தில், கடந்த ஒரு வாரமாக தூா்வாரும் கப்பல் பாதுகாப்பாக நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புயல் பதற்றம் தணிந்து தூா்வாரும் பணிக்காக வந்தபோது துறைமுக முகத்துவாரத்தில் இந்தக் கப்பல் கடலுக்குள் மணல் குவியலில் சிக்கிக் கொண்டது.
அதனை பத்திரமாக மீட்டு மீண்டும் ஆழ்கடல் பகுதிக்கு அனுப்பும் பணியில் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.