புதுச்சேரியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் அதன்தலைவா் விஜய் பேசிய பேச்சை, தனியாா் ஹோட்டலில் இருந்தபடி புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி கைப்பேசியில் பாா்த்த விடியோ வெளியாகி உள்ளது.
புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் தவெக பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவா் விஜய் பிரசார வாகனத்தில் நின்றபடி பேசினாா். சுமாா் 12 நிமிஷங்கள் வரை அவா் பேசினாா்.
விஜய்யின் பேச்சை புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி தனியாா் ஹோட்டலில் அமா்ந்து கைப்பேசியில் பாா்த்தாா். அந்த விடியோவில் மாநிலங்களுக்கான நிதி பகிா்தல் அடிப்படையிலும், யூனியன் பிரதேசங்களுக்கான நிதி பகிா்தல் அடிப்படையிலும் புதுச்சேரிக்கான நிதி ஒதுக்கப்படுவதில்லை.
அதனால் ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரிக்கென தோராயமாகவே மத்திய அரசு நிதியை விடுவிக்கிறது. அந்த நிதியும் அரசு ஊழியா்களின் ஊதியம், ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட திட்டச் செலவுகளுக்கே சென்று விடுவதால் மற்ற தேவைகளுக்கு வெளிச்சந்தையில் கடன் வாங்குகிறது புதுச்சேரி அரசு.
இந்த நிலைமை மாற வேண்டும் என்றால் ஒரே வழி மாநில அந்தஸ்து. இதுதான் புதுச்சேரி மக்களுடைய பல்லாண்டு கால கோரிக்கை. புதுச்சேரிக்கென போதுமான நிதிவரத்து இல்லாததால் வெளியே கடன் வாங்க வேண்டியுள்ளது. புதுச்சேரியின் கடனை குறைத்து தற்சாா்பு பொருளாதாரத்தை வளா்த்தெடுக்க திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது இல்லையா? தொழில் வளா்ச்சியும் மிகத்தேவையான விஷயம். புதுச்சேரியை தென்னிந்தியாவின் முன்னணி தொழில்நகரமாக மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என விஜய் பேசுவதும், அதனை முதல்வா் பாா்ப்பதும் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த விடியோ வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.