புதுச்சேரியில் 3 இளைஞர்கள் வெட்டிக் கொலை!
புதுச்சேரியில் 3 இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்டது பற்றி...
புதுச்சேரியில் மூன்று இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்குத் தெருவில் உள்ள பாழடைந்த வீட்டில் இரண்டு இளைஞர்கள் வெள்ளிக்கிழமை காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
இதையும் படிக்க : ரூ. 41 கோடிக்கு வாங்கப்பட்ட ஆந்திர இனப் பசு! கின்னஸ் சாதனை!
போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் உழவர்கரை சேர்ந்த பிரபல ரெளடி தெஸ்தான் என்பவரின் மகன் ரிஷி, திடீர் நகரைச் சேர்ந்த தேவா மற்றும் ஜே.ஜே. நகரைச் சேர்ந்த ஆதி ஆகியோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்விரோதம் காரணமாக ரெளடிகள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.