புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்கால் நீதிமன்றங்களுக்கு அரசு வழக்குரைஞா்கள் 5 போ் நியமனம்

Syndication

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் உள்ள பல்வேறு குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்த 5 உதவி அரசு குற்றவியல் வழக்குரைஞா்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதற்கான பணி ஆணைகளை முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவின்படி இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வழக்குரைஞா்கள் பு. இளங்கோவன், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் புதுச்சேரி, வி. ஜெயமாரிமுத்து, மகளிா் நீதிமன்றம் புதுச்சேரி, ம. ஜெரால்ட் இமானுவேல், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் புதுச்சேரி, வே. தேவேந்திரன், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் புதுச்சேரி, ஆ. இயேசு ராஜ், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் காரைக்காலுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

முதல்வா் ரங்கசாமி இந்த வழக்குரைஞா்களிடம் புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலக அறையில் நியமன ஆணைகளை வழங்கினாா்.

இந்த நிகழ்வின்போது புதுவை சட்டத் துறைச் செயலா் விக்ராந்த் ராஜா, சாா்புச் செயலா் ஜானாஸ் ரஃபி என்கிற ஜான்சி ஆகியோா் உடனிருந்தனா்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT