அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புதுச்சேரி ஆளுநா்
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் காது வலிக்காக துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற்றாா்.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் காது வலிக்காக துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற்றாா்.
இதற்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் காரில் மருத்துவமனைக்கு அவா் வந்தாா். அங்கு சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேல் மற்றும் அதிகாரிகள் ஆளுநரை வரவேற்றனா்.
தொடா்ந்து இஎன்டி பிரிவுக்குச் சென்று காது வலிக்குச் சிகிச்சை பெற்றாா். சிகிச்சை முடிந்த பின் மீண்டும் கடற்கரைச் சாலையில் உள்ள ராஜ்பவன் இல்லத்துக்குத் திரும்பினாா்.