புதுவை இணைப்பு நாள் விழா நவம்பா் 1-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
புதுவை யூனியன் பிரதேசம், இந்தியாவுடன் இணைந்த தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அன்றைய தினம் முதல்வா் ரங்கசாமி கடற்கரை சாலை காந்தி திடலில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி வரும் நவ. 1-ஆம் தேதி நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல் அருகே பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இரவு பகலாக ஊழியா்கள் இதில் ஈடுபட்டு வருகின்றனா். இதையொட்டி சட்டப்பேரவை வளாகம், துணைநிலை ஆளுநா் மாளிகை , தலைமை செயலகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களும் அன்றைய தினம் மின்விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கும்.