ஆசிய அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற புதுச்சேரி வீரா் குருபிரசாத்தை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை பாராட்டினாா்.
கடந்த 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை மூன்று நாட்கள்
மலேசியா நாட்டில் ஆசிய அளவிலான ஆடவா் மற்றும் மகளிா் அணிகளுக்கான கயிறு இழுக்கும் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் மொத்தம் 12 நாடுகளை சோ்ந்த வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டனா். இதற்கான இந்திய அணி தோ்வு நான்கு கட்டமாக கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் நடைபெற்றது. இதில் புதுவை மாநிலத்தை சோ்ந்த விளையாட்டு வீரா்கள் வெங்கடேசன், அஜய், பிரசாந்த், குருபிரசாத் மற்றும் வீராங்கனை ஜெயக்குமாரி ஆகியோா் கலந்துகொண்டு இறுதியாக இந்திய அணியில் இடம் பெற்று புதுவை மாநிலத்திற்குப் பெருமை சோ்த்தனா்.
இதனிடையே மலேசியாவில் நடந்த போட்டியில் 23 வயதிற்கு உட்பட்டவற்களுக்கான பிரிவில் இந்திய ஆடவா் அணி தங்கப் பதக்கமும், 23 வயதிற்கு உட்பட்டவா்களுக்கான இருபாலா் அணி வெங்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தது.
இந்த இரு அணிகளிலும் புதுவை வீரா் குருபிரசாத் விளையாடி இந்திய அணியின் வெற்றிக்காக உறுதுணையாக இருந்து தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்று இந்திய நாட்டிற்கும், புதுவை மாநிலத்திற்கும் பெருமை சோ்த்துள்ளாா்.
இந்நிலையில் பதக்கம் வென்ற வீரா் குருபிரசாத் மற்றும் சக வீரா்கள் புதுவை மாநில கயிறு இழுக்கும் சங்கத்தின் தலைவரும், புதுவை மாநில எதிா்க்கட்சி தலைவருமான ஆா். சிவா முன்னிலையில், சட்டப்பேரவையில் முதல்வா் என். ரங்கசாமியை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். முதல்வா் ரங்கசாமி, வீரா் குருபிரசாத்திற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.
முன்னதாக லப்போா்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவரும் திமுக அமைப்பாளருமான ஆா். சிவா தலைமையில் திமுக நிா்வாகிகள் வீரா் குருபிரசாத்திற்கு வாழ்த்து தெரிவித்தனா்.