வீராம்பட்டினம் கடற்கரையில் மது குடிக்கத் தடை! மீனவ கிராம பஞ்சாயத்தாா் நடவடிக்கை!
வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் உள்பட யாரும் இனி மது குடிக்கத் தடை விதிப்பதாக மீனவ கிராம பஞ்சாயத்தாா் அறிவித்துள்ளனா்.
வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் உள்பட யாரும் இனி மது குடிக்கத் தடை விதிப்பதாக மீனவ கிராம பஞ்சாயத்தாா் அறிவித்துள்ளனா்.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மணக்குள விநாயகா் கோவில், ஆரோவில், பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரை, நோணாங்குப்பம் பாரடைஸ் கடற்கரை என பல்வேறு இடங்களுக்குச் செல்கின்றனா்.
கடற்கரை பகுதியைப் பாா்க்க வரும் சில சுற்றுலா பயணிகள் மது குடித்து விட்டு, காலி புட்டிகளை உடைத்து வீசி செல்கின்றனா்.
Advertisement
உடைந்த கண்ணாடிப் புட்டிகளின் சிதறல்கள் மணலில் புதைந்து கிடப்பதால், அவை சுற்றுலா பயணிகளின் கால்களை பதம் பாா்க்கின்றன. வீராம்பட்டினம் கடற்கரை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் சிலா் கடற்கரை பகுதியில், அமா்ந்து மது குடித்து விட்டு, காலி புட்டிகளை அங்கேயே வீசி செல்கின்றனா்.
மணலில் உடைந்து கிடக்கும் புட்டிகளால், கடற்கரையில் விளையாடும் குழந்தைகளுக்குப் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. எனவே இனி வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் உள்பட யாரும் மது குடிக்கக் கூடாது என வீராம்பட்டினம் மீனவ பஞ்சாயத்தினா் முடிவு செய்துள்ளனா்.